தங்களைப் பற்றிய விபரங்களை வெளிப்படுத்திக் கொள்ளாத இந்தத் தம்பதியினர் இயற்கையான வழிமுறையில், பெற்றுக்கொண்ட மூன்று ஆண் பிள்ளைகளின் பெற்றோராவர். இவர்கள் அடுத்து ஒரு பெண் குழந்தையை வேண்டிய IVF சிகிச்சை முயற்சியின்போது உருவான இரட்டை ஆண் குழந்தைகளின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுத்து இடை நிறுத்தியிருக்கிறார்கள்.
இருபெண் பிள்ளைகளின் தகப்பன் என்ற வகையில் நான் கொண்ட பெருமிதத்தின் மகத்துவத்தை எனக்கு மேலும் உணர்த்திய இந்தத் தம்பதியினர் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லைத்தானே?
மனித குலத்தின் பண்பாட்டு விழுமியங்களை மிகுந்த கேள்விக் உள்ளாயிருக்கும் இந்தத் தம்பதியினரின் வேண்டுகோளுக்கு மனித குலம், என்ன பதில் அளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இணைப்புக்கள்
http://www.heraldsun.com.au/news/national/desperate-couple-abort-twin-boys-in-desperate-bid-for-ivf-girl/story-e6frf7l6-1225983907853
நியுசிலாந்துத் பெற்றோர்களின் கருத்துக்களை இங்கு காணலாம்.
http://www.treasures.co.nz/Community/Forum/Room/Topic/?topicId=41793
நீங்கள் என்ன சொல்லப்போகின்றீர்கள்?
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.
2 comments:
நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
நன்றி பனித்துளி சங்கர்.
நீக்கிவிட்டேன். கரிசனையுடன் கூடிய ஆலோசனைக்கும் நன்றி
அன்புடன் சாதாரணன்.
Post a Comment